Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1039 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1039பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உறையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில்.) 2
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே –1-10-2
அன்று, Andru - முற்காலத்தில்
இலங்கை பதிக்கு, Ilankai Pathikku - லங்காபுரிக்கு
இறை ஆய, Irai Aaya - அரசர்களாயிருந்த
அரக்கரவர், Arakkaravar - (மாலிமுதலிய) ராக்ஷஸர்கள்
குலம்கெட்டு மாள, Kulamkettu Maala - கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக
கொடி, Kodi - (தனக்கு) த்வஜமான
புள், Pul - பெரிய திருவடியை
திரித்தாய், Thiriththai - ஸஞ்சரிப்பித்தவனே!,
விலங்கல் குடுமி, Vilankal Kudumi - (மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள்) விலங்கிப் போகவேண்டும்படியான (உயர்த்திபொருந்திய) சிகரத்தையுடைய
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே
மேய, Meya - மேவியிருப்பவனாய்
துளபம், Thulabam - திருத்துழாயினாலாகிய
அலங்கல், Alangal - மாலையை
முடியாய், Mudiyaai - திருமுடியிலே அணிந்துள்ளவனே!
அருளாய், Arulai - (அடியேன் மீது) க்ருபை பண்ணியருள வேணும்.