| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1039 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உறையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில்.) 2 | இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய் விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே –1-10-2 | அன்று, Andru - முற்காலத்தில் இலங்கை பதிக்கு, Ilankai Pathikku - லங்காபுரிக்கு இறை ஆய, Irai Aaya - அரசர்களாயிருந்த அரக்கரவர், Arakkaravar - (மாலிமுதலிய) ராக்ஷஸர்கள் குலம்கெட்டு மாள, Kulamkettu Maala - கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக கொடி, Kodi - (தனக்கு) த்வஜமான புள், Pul - பெரிய திருவடியை திரித்தாய், Thiriththai - ஸஞ்சரிப்பித்தவனே!, விலங்கல் குடுமி, Vilankal Kudumi - (மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள்) விலங்கிப் போகவேண்டும்படியான (உயர்த்திபொருந்திய) சிகரத்தையுடைய திருவேங்கடம், Thiruveengadam - திருமலையிலே மேய, Meya - மேவியிருப்பவனாய் துளபம், Thulabam - திருத்துழாயினாலாகிய அலங்கல், Alangal - மாலையை முடியாய், Mudiyaai - திருமுடியிலே அணிந்துள்ளவனே! அருளாய், Arulai - (அடியேன் மீது) க்ருபை பண்ணியருள வேணும். |