Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1038 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1038பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை;) 1
கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே –1-10-1
கண் ஆர் கடல் சூழ், Kan Aar Kadal Soozh - விசாலமான கடலாலே சூழப்பட்ட
இலங்ககைக்கு இறைவன் தன், Ilankakaikku Iraivan Than - லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய
திண்ஆகம் பிளக்க, Thinagham Pilakka - திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக
சரம், Saram - அம்புகளை
செல உய்த்தாய், Sela Uyththai - செலுத்தினவனே!
விண்ணோர் தொழும், Vinnor Thozhum - (பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற
வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருமலையிலே
மேய அண்ணா, Meya Annan - எழுந்தருளி யிருக்கிற பெருமானே!
அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - என் துன்பங்களை நீக்கியருள வேணும்.