| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1037 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்றபடி) 10 | கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –1-9-10 | ஏழ் உலகுக்கு, Ezhu Ulagukku - எல்லா வுலகங்களுக்கும் கண் ஆய், Kan Aay - கண் போன்றவனும் உயிர் ஆய, Uyir Aay - உயிர் போன்றவனும் எம், Em - எமக்காக கார் வண்ணணை, Kaar Vannanaik - மேகம் போன்ற திரு நிறத்தையுடையவனும் விண்ணோர் தாம் பரவும்பொழில் வேங்கடம், Vinnor Thaam Paravumpozhil Vengadam - நித்ய ஸூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற, சோலை சூழ்ந்த திருமலையிலே வேதியதனை, Vediyathanai - வேத ப்ரதிபாத்யனாய் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானைக் குறித்து திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன் கலியன், Thin Ar Maadangal Soozh Thiru Mangaiyarkon Kalyan - திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருமங்கையி லுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த) பண் ஆர் பாடல் பத்தும், Pan Ar Paadal Paththum - பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும் பயில்வார்க்கு, Payilvaarakku - ஓதுமவர்களுக்கு பாவங்கள் இல்லை, Paavangal Illai - பிரதிபந்தங்களெல்லாம் தொலைந்து போம். |