| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1035 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (நோற்கையாவது – ஸங்கல்பிக்கை; பல பிறவிகளை ஸங்கல்பிக்கையாவது – பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்தலாம்.) 8 | நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால் ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான் கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-8 | கோல் தேன் பாய்ந்து ஒழுகும், Kol Then Paayndhu Ozhugum - கோல்களின்றும் தேன் இழிந்து வெள்ளமிடா நின்ற குளிர் சோலை சூழ் வேங்கடவா, Kulir Solai Soozh Vengadavaa - குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே! எம்பெருமான், Emperumaan - அஸ்மத் ஸ்வாமியே!, பல் பிறவி நோற்றேன், Pal Piravi Nootren - எனக்குப் பல பிறவிகள் உண்டாகும்படி காரியம் செய்து வைத்தேன். உன்னை காண்பது ஓர் ஆசையினால், Unnai Kaanbathu Oor Aasaiyin Aal - உன்னை ஸேவிக்கவேணுமென்று ஒரு காதல் கிளர்ந்த படியினாலே இப்பிறப்பே ஏற்றேன், Ippirappe Aetren - இந்த ஜந்மத்திலே உனக்கு அன்பனாக ஏற்பட்டேன். இடர்உற்றனன், Idarutranan - (இன்னமும் நேரக்கூடிய பிறவிகளை நினைத்து) துக்கப்படா நின்றேன்; |