Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1032 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1032பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் எப்படிப்பட்டவையாயினும் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன்.) 5
எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-5
செப்பு ஆர் திண் வரை சூழ், Seppu Aar Thin Varai Soozh - அரணாகப் போரும்படியான திண்ணிய மலைகளாலே சூழப்பட்ட
திரு வேங்கடம் மா மலை, Thiru Vengadam Maa Malai - திருமலையிலே எழுந்தருளியிரா நின்ற
என் அப்பா, En Appaa - என் அப்பனே
துப்பா, Thuppaa - ஸர்வசக்தனே!
எப்பாவம் பலவும் இவையே செய்து, Eppavam Palavum Ivaiye Seidhu - பலவகைப்பட்ட பாவங்களையே பண்ணி
இளைத்தொழிந்தேன், Ilaiththozhindhaen - துக்கப்பட்டவனாய்
நின் அடியே, Nin Adiye - உனது திருவடிகளை
தொடர்ந்து, Thodarnthu - அநுஸரித்து
ஏத்தவும், Aeththavum - துதிக்கவும்
கிற்கின்றிலேன், Kirkkinrilen - சக்தியற்றவனான நான் வந்து அடைந்தேன்-.