| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1032 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் எப்படிப்பட்டவையாயினும் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன்.) 5 | எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன் துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன் செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-5 | செப்பு ஆர் திண் வரை சூழ், Seppu Aar Thin Varai Soozh - அரணாகப் போரும்படியான திண்ணிய மலைகளாலே சூழப்பட்ட திரு வேங்கடம் மா மலை, Thiru Vengadam Maa Malai - திருமலையிலே எழுந்தருளியிரா நின்ற என் அப்பா, En Appaa - என் அப்பனே துப்பா, Thuppaa - ஸர்வசக்தனே! எப்பாவம் பலவும் இவையே செய்து, Eppavam Palavum Ivaiye Seidhu - பலவகைப்பட்ட பாவங்களையே பண்ணி இளைத்தொழிந்தேன், Ilaiththozhindhaen - துக்கப்பட்டவனாய் நின் அடியே, Nin Adiye - உனது திருவடிகளை தொடர்ந்து, Thodarnthu - அநுஸரித்து ஏத்தவும், Aeththavum - துதிக்கவும் கிற்கின்றிலேன், Kirkkinrilen - சக்தியற்றவனான நான் வந்து அடைந்தேன்-. |