| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1030 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (ஜீவஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுகிறார்.) 3 | கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால் என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன் குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-3 | குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா, Kundru Aey Megam Adhir Kulir Maa Malai Vengadavaa - மலைபோன்ற மேகங்கள் கோஷிக்குமிடமாய்க் குளிர்ந்ததாய்ச் சிறந்ததான திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே! குறிக்கோள் ஒன்று இலாமையினால், Kurikkol Onru Ilamaiyinai - விவேகமென்பது சிறிதுமில்லாமையினாலே இரந்தார்க்கு, Irandhaarkku - யாசித்தவர்களுக்கு இனிது ஆக, Inidhu Aaga - மதுரமாக என்றேனும், Endraenume - ஒருநாளும் உரைத்து அறியேன், Uraiththu Ariyaen - பதில் சொல்லி அறியேன்; பல் உயிரை, Pal Uyirai - பல பிராணிகளை கொன்றேன், Konraen - கொலைசெய்து முடித்தேன்; அன்றே, Andrae - அந்த க்ஷணத்திலேயே வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னை வந்து பற்றினேன்; |