| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1029 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (ஆபாஸபந்துக்களை உற்ற உறவினராக நினைத்திருந்த குற்றத்தைப் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுந்தார் கீழ்ப்பாட்டில்;) 2 | மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன் தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-2 | தேன்ஏய், Then Aey - வண்டுகள் நிறைந்த பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட திருவேங்கடம் மா மலை, Thiruveengadam Maa Malai - திருவேங்கடமென்னும் சிறந்த மலைகளாலே எழுந்தருளியிரா நின்ற என் ஆனாய், En Aanai - ஆனை போன்ற எம்பெருமானே! மா நிலத்து, Maa Nilaththu - இப்பெரிய பூமண்டலத்திலே மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு, Maan Aey Kan Madavaar Mayakkil Pattu - மான்போன்ற கண்ணழகுடைய மாதர்களின் கண்மயக்கிலே, அகப்பட்டு, நாநாவித நரகம் புகும் பாவம், Naanavitha Naragam Pugum Paavam - பலவகைப்பட்ட நரகங்களிலே புகுவதற்குக் காரணமான பாவங்களை நானே செய்தேன், Naane Seidhen - நானொருவனே செய்து வைத்தேன்; வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்பக்கல் வந்து சரணம் புகுந்தேன்; |