| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1026 | பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (இத்திருமொழியில் கீழ்ப்பாசுரங்க ளெல்லாவற்றிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுதலொன்றே யுள்ளது; பரோபதேசமென்பது இல்லை. இப்பாசுரம் “பேசுமின் திருநாம மெட்டெழுத்தும் ” என்று தொடங்கப்படுகிறது. பேசுமின் என்றால், ‘சொல்லுங்கள்’ ‘ என்று பொருள்படுகையாலே முன்னடிகளிரண்டும் பரோபதேசமென்றும் பின்னடிகளிரண்டும் ஸ்வாத்மோத்போதநமென்றும் கொள்க.) 9 | பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும் பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம் வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம் தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-9 | பேசும், Pesum - எல்லாராலும் அநுஸந்திக்கத் தக்கதும் இன், In - போக்யமுமான திரு நாமம் எட்டு எழுத்தும், Thiru Naamam Ettu Ezhuthum - திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை சொல்லி நின்று, Solli Nindru - அநுஸந்தித்து பின்னரும், Pinnaarum - மேன்மேலும் பேசுவார் தம்மை, Pesuvaar Thammai - (அதனையே) அநுஸந்திப்பவர்களை உய்யவாங்கி, Uyya Vaangi - உஜ்ஜீவிக்கச்செய்து பிறப்பு அறுக்கும் பிரான் இடம், Pirappu Arukkum Piraan Idam - (அவர்களது) ஸம்ஸாரத்தைத் தொலைக்கு மெம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடமானதும், வாசம் மா மலர் நாறும், Vaasam Maa Malar Naarum - மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற வார் பொழில், Vaar Pozhil - விசாலமான சோலைகளாலே சூழ்தரும், Sooltharum - சூழப்பட்டதும், உலகுக்கு எல்லாம், Ulagukku Ellam - எல்லா வுலகங்களுக்கும் தேசம் ஆய் திகழும், Desam Aay Thigalum - திலகம்போன்று விளங்குவதுமான திருவேங்கடம் மலை, Thiruveengadam Malai - திருமலையை நெஞ்சமே அடை, Nenjamai Adai - மனமே! அடைந்திடு. |