| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1023 | பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (உலகங்களெல்லாம் பிரளயத்திலே அழுந்திப் போகாதபடி அவற்றைத் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கி ஓராலந்தளிரிலே பள்ளி கொண்டவனும், சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கி யருளினவனும், “அழகியான் தானே அரியுருவன் தானே” என்கிறபடியே அழகிய கோரப்பற்களுடனே மஹாபலசாலியான நரசிங்கமாய்த் திருவவதரித்து, தன் வலிவோடு ஒத்தவலிவுடையனான ஹிரண்யனுடைய மார்விலே நகங்களை யூன்றி அவ்வுடலைப் பிளந்தவனுமான பெருமானுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே!) 6 | எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன் ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-6 | பண்டு, Pandhu - முன்னொருகால், எண் திசைகளும், En Thisaigalum - எட்டுத் திக்குகளையும் ஏழ் உலகமும், Ezh Ulagamum - ஸப்த லோகங்களையும் வாங்கி, Vaangi - (பிரளயம் கொள்ளாதபடி) எடுத்து பொன் வயிற்றில், Pon Vayittril - (தனது) அழகிய திருவயிற்றிலே பெய்து, Peidhu - இட்டுவைத்து ஓர் ஆல் இலை, Oor Aal Ilai - ஒரு ஆலந்தளிரிலே பள்ளி கொண்டவன், Palli Kondaavan - சயனித்தருளினவனும் பால் மதிக்கு, Paal Mathikku - வெளுத்த சந்திரனுக்கு இடர், Idar - க்ஷயரோகமாகிற துக்கத்தை தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும், ஒள் எயிற்றோடு, Ol Eiyirtoadu - ஒளிபொருந்திய கோரப் பற்களோடு கூடி திண் திறல் அரி ஆயவன், Thin Thiral Ari Aayavan - மிக்க வலிவுடைய நரசிங்கமூர்த்தியாகத் தோன்றினவனாய் ஒண் திறல் அவுணன், On Thiral Aavunan - மஹா பலசாலியான இரணியாசுரனுடைய உரத்து, Urathu - மார்விலே உகிர், Ukir - (திருக்கை) நகங்களை வைத்தவன், Vaiththavan - வைத்து அழுத்தினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற |