Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1020 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1020பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (சயனித்தருளும்படியையும் நின்றருளும்படியையும் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார்; நடந்தருளும்படியை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 3
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-3
நின்ற, Nindra - பேராமல் நின்று கொண்டிருந்த
மா மருது, Maa Maruthu - பெரிய மருதமரங்களிரண்டும்
இற்று வீழ, Itru Veela - முறிந்து விழும்படியாக
நடந்த, Nadanda - நடைகற்ற
நின்மலன், Ninmalan - நிர்மலனும்,
நேமியான், Nemiyan - திருவாழியை யுடையவனும்,
என்றும், Endrum - எப்போதும்
வானவர், Vaanavar - நித்யஸூரிகள்
கை தொழும், Kai Thozum - ஸேவிக்கப்பெற்ற
தாமரை அடி இணை எம்பிரான், Thamarai Adi Inai Empran - இரண்டு திருவடித் தாமரைகளை யுடைய ஸ்வாமியும்,
கன்றி, Kandri - (இந்திரன்) கோபங்கொண்டு
மாரி, Maari - மழையை
பொழிந்திட, Pozhindida - பெய்வித்தவளவிலே
ஆ நிரைக்கு, A Niraikku - பசுக்கூட்டங்களுக்கு
இடர்நீக்குவான், Idarnikkuvan - துன்பம் தொலைப்பதற்காக
சென்று, Sendru - போய்
குன்றம் எடுத்தவன், Kundram Eduththavan - கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற