Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1016 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1016பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (கீழ்ப்பாட்டுகளில் தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்றும், சென்று காண்டற்கு அரிய கோயில்” என்றும், ‘தினைத்தனையுஞ் செல்லவொண்ணா” என்றும் இத்திவ்ய தேசத்தின் அருமையைச் சொல்லிவந்தாரே;) 9
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே –1-7-9
நெஞ்சே, Nenjey - ஓ மனமே!
நல்லை, Nallai - நீ மிகவும் நல்லவன்;
நம்முடை நம்பெருமான், Nammudai Namberumaan - நமக்கு ஸ்வாமியாய்
அல்லி மாதர் புல்க நின்ற, Alli Maathar Pulka Nindra - பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்
ஆயிரம் தோளன் இடம், Aayiram Tholan Idam - ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய்,
நெல்லி, Nelli - நெல்லி மரங்கள்
மல்கி, Malki - நிறைந்து
கல் உடைப்ப, Kal Udaippa - பாறைகளை உடைக்கவும்
புல் இலை ஆர்த்து, Pul Ilai Aarththu - பனையோலைகள் ஒலிசெய்யவும்
அதர் வாய், Adhar Vaai - வழிகளிலே
சில்லி, Chilli - சுவர்க்கோழிகளையுடைய
சில் என்று ஒல் அறாத, Sil Endru Ol Aradha - சில் என்கிற ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற
சிங்கவேள் குன்றம், Singaveal Kunram - சிங்கவேள்குன்றத்தை
நாம்தொழுதும், Naamthozhudum - நாம் ஸேவிப்போம்.