| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1016 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (கீழ்ப்பாட்டுகளில் தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்றும், சென்று காண்டற்கு அரிய கோயில்” என்றும், ‘தினைத்தனையுஞ் செல்லவொண்ணா” என்றும் இத்திவ்ய தேசத்தின் அருமையைச் சொல்லிவந்தாரே;) 9 | நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம் நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச் சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே –1-7-9 | நெஞ்சே, Nenjey - ஓ மனமே! நல்லை, Nallai - நீ மிகவும் நல்லவன்; நம்முடை நம்பெருமான், Nammudai Namberumaan - நமக்கு ஸ்வாமியாய் அல்லி மாதர் புல்க நின்ற, Alli Maathar Pulka Nindra - பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய் ஆயிரம் தோளன் இடம், Aayiram Tholan Idam - ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய், நெல்லி, Nelli - நெல்லி மரங்கள் மல்கி, Malki - நிறைந்து கல் உடைப்ப, Kal Udaippa - பாறைகளை உடைக்கவும் புல் இலை ஆர்த்து, Pul Ilai Aarththu - பனையோலைகள் ஒலிசெய்யவும் அதர் வாய், Adhar Vaai - வழிகளிலே சில்லி, Chilli - சுவர்க்கோழிகளையுடைய சில் என்று ஒல் அறாத, Sil Endru Ol Aradha - சில் என்கிற ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற சிங்கவேள் குன்றம், Singaveal Kunram - சிங்கவேள்குன்றத்தை நாம்தொழுதும், Naamthozhudum - நாம் ஸேவிப்போம். |