Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1015 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1015பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறைவழுவாது துதிக்கும்படியாக விலக்ஷணமான நரசிங்கவுருக் கொண்டு எம்பெருமா னெழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.) 8
நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே –1-7-8
நான் முகனும் ஈசனும் ஆய், Naan Mughanum Eesanum Aayi - பிரமனும் சிவனும் கூடிக் கொண்டு
நா தழும்ப, Naa Thazhumba - நாக்குத் தடிக்கும்படி
முறையால் ஏத்த, Muraiyal Aetha - கிரமப்படி ஸ்தோத்ரம் பண்ண
காய்த்த, Kaayththa - காய்கள் நிறைந்த
வாகை, Vaagai - வாகை மரங்களினுடைய
நெற்று, Nettru - நெற்றுகளானவை
ஒலிப்ப, Olippa - சப்திக்க,
கல் அதர், Kal Adhar - கல்வழிகளிலேயுண்டான
வேய் கழை, Veiy Kazhai - குழல் மூங்கிற் செடிகள்
போய், Poy - ஆகாசத்தை அளாவிப்போய்
தேய்த்த, Theyththa - (மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினாலுண்டான
தீயால், Theeyaal - நெருப்பினால்
விண் சிவக்கும், Vin Sivakkum - ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற