| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1014 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (நரசிங்கமூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்றிருந்ததனால் அந்தக் கோபாக்நி மேலுலகமளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப்புகவே ஸர்வலோக ஸம்ஹாரஸமயம் பிறந்துவிட்ட தென்று மூவுலகத்திலுள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியா யிருந்ததாம். அப்படிப்பட்ட உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.) 7 | முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம் கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய் தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே –1-7-7 | முனைத்த சீற்றம், Munaiththa Seetrum - மிக்க கோபமானது போய், Poy - வளர்ந்து சென்று விண் சுட, Vin Sudha - ஆகாயத்தைக் கொளுத்தவும் மூ உலகும்பிறவும், Moo Ulagum Piravum - மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும் அனைத்தும், Anaiththum - எல்லாம் அஞ்ச, Anja - பயப்படவும் கனைத்த தீயும், Kanaittha Theeyum - ஒலி செய்கின்ற நெருப்பும் கல்லும், Kallum - (அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும் அல்லா வில் உடை வேடரும் ஆய், Allaa Vil Udai Veadarum Aayi - உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே தினை தனையும் செல்ல ஒண்ணா, Thinai Thanaiyum Sella Onna - க்ஷணகாலமும் கிட்ட வொண்ணாததான |