Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1013 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1013பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (சீற்றத்தாலே அக்நிஜ்வாலைபோலே ஜ்வலிக்கிற சிவந்த கண்ணையும் ஒளிவிடாநின்ற பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு “அப்பப்ப! இதென்ன உரு!” என்று பயப்பட்டு தேவர்கள் அங்கு மிங்கும் கால் தடுமாறிச் சிதறி ஓடும்படியாக நரசிங்கவுருக்கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.) 6
எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே –1-7-6
எரிந்த, Erintha - (சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற
பை கண், Pai Kan - பசுமைதங்கிய கண்களோடும்
இலங்கு பேழ்வாய் எயிற்றொடு, Ilangu Pezhvai Eiyir Thodu - விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற
இது, Idhu - இந்த நரசிங்கத் திருக்கோலமானது
எவ்வுரு என்று, Evuru Endru - என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி
வானோர், Vaanor - தேவர்கள்
இரிந்து கலங்கி ஓட, Irinthu Kalangi Oda - அங்குமிங்கும் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக
இருந்த, Irundha - எழுந்தருளியிருந்த
அம்மானது இடம், Ammaanathu Idam - ஸர்வேசரனுடைய இடமாவது:-
உழுவை, Uzhuvai - புலிகளானவை
நெரிந்த வேயின் முழையுள் நின்று, Nerindha Veyin Muzhaiyul Nindru - நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும்
நீள் நெறி வாய், Neel Nerai Vaai - பெரிய வழியிலே (வந்து)
திரிந்த ஆனை சுவடு பார்க்கும், Thirindha Aanai Suvadu Paarkkum - காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான