| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1009 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (சீற்றத்தாலே கடைவாயுடனே நாக்கை எற் றிக்கொள்ளுகிற பெரிய வாயையுடைய நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி, பர ஹிம்ஸையே போது போக்கான இரணியனுடைய மார்பைப் பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.) 2 | அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம் மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே –1-7-2 | அலைத்த பேழ்வாய், Alaitha Pezhvai - (சீற்றத்தாலே) நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும் வாள் எயிறு, Vaal Eiyiru - ஒளி பொருந்திய பற்களையுமுடையதாய் ஓர், Oor - ஒப்பற்றதாய் கோள், Kol - மிடுக்கையுடையதான அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹமாய்க்கொண்டு கொலை கையாளன் அவுணன் நெஞ்சு இடந்த, Kolai Kaiyaalan Avunan Nenju Idanthu - ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்வைக் கிழித்தெறிந்த கூர் உகிராளன் இடம், Koora Ukiraalan Idam - கூர்மையான நகங்களையுடைய எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாவது:- மலைத்த, Malaittha - (வேடர்களாலே) ஆக்கிரமிக்கப்பட்ட செல் சாத்து, Sel Saathu - வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே எறிந்த, Erintha - (பிரதியாகச்) செய்யப்பட்ட பூசல், Poosal - சண்டையிலே வல் துடி வாய் கடுப்ப, Val Thudi Vaai Kaduppa - கடூரமான தொனியை யுடைத்தான பறையானது கோஷம் செய்ய, சிலை கை வேடர், Silai Kai Veda - வில்லைக் கையிலேயுடைய வேடருடைய தெழிப்பு, Thezhippu - ஆரவாரமானது அறாத, Aradha - எப்போதும் மாறாத |