| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1008 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (கீழ் இரண்டாந் திருமொழியின் நான்காம் பாட்டின் உரையில் நரஸிம்ஹாவதார ப்ரமேயங்களை மிக்க விரிவாக வரைந்தோ மாதலால் அங்கே கண்டு கொள்வது.) 1 | அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன் பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம் பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ் செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1-7-1 | அங்கு, Angu - (‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய், Am Kan Nyaalam Anja Oor Aal Ari Aay - அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு) அவுணன் பொங்க, Avunan Pong - இரணியன் கிளர்ந்த வளவிலே, ஆகம், Aagam - அவனது உடலை வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே போழ்ந்த, Pozhntha - இருபிளவாகப் பிளந்த புனிதன் இடம், Punithan Idam - பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;- செம் கண் ஆளி, Sem Kan Aali - (சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை பை கண் ஆனை கொம்பு கொண்டு, Pai Kan Aanei Kombu Kondu - பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து பத்திமையால், Pathimaiyaal - பக்தியினாலே அடி கீழ், Adi Keezh - (பகவானுடைய) திருவடிகளிலே இட்டு, Ittu - ஸமர்ப்பித்து இறைஞ்சும், Iraichum - ஆச்ரயிக்கப்பெற்ற சிங்கவேள் குன்றம், Singaveal Kunram - அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம். |