Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1007 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1007பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (இமையோர் நாதனாகிய இந்திரன் தனது பரிவாரங்களை யெல்லாம் அழைத்து நாம் எல்லாரும் நைமிசாரணியத்துள் சென்று எம்பெருமானை ஸேவிப்போம் வாருங்கள்;) 10
ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே –1-6-10
ஏதம் வந்து அணுகா வண்ணம், nan - “துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை
நாம் எண்ணி, nan - நாம் எண்ணியிருப்போமாகில்
தொழுதும் எழு மின் என்று, nan - (நைமிசாரண்யத்திலேபோய்த்) தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி
இமையோர் நாதன் வந்து, nan - தேவேந்திரன் வந்து
இறைஞ்சும், nan - ஆச்ரயிக்கப்பெற்ற
நைமிச அரணியத்து எந்தையை, nan - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை
சிந்தையுள் வைத்து, nan - தியானம் செய்து
காதல் மிகுந்த, nan - பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற
கலியன், nan - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்மாலை, nan - அருளிச் செய்த இச்சொல் மாலையை
கற்று வல்லுநர்கள் தாம், nan - அப்யஸித்துத் தேறினவர்கள்
ஓதம்நீர் வையகம், nan - கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்தை
வெண் குடை கீழ் ஆண்டு, nan - வெளுத்த குடை நிழலின் கீழே இருந்துகொண்டு அரசாட்சி செய்தபின்பு
உம்பரும் ஆகுவர், nan - நித்யஸூரிகளோடும் சேரப்பெறுவர்கள்.