Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1006 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1006பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (தம்முடைய அத்யவஸாயத்தை வெளி யிடுகிறாரிதில்.) 9
ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-9
தேன் உடை கமலம் திருவினுக்கு அரசே, Then Udai Kamalam Thiruvinukku Arase - தேன் நிறைந்த தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்குப் பதியானவனே!
திரை கொள்மா நெடு கடல் கிடந்தாய், Thirai Kolma Nedu Kadal Kidandhai - அலைகள் நிரம்பிய மிகப்பெரிய திருப் பாற்டலில் கண் வளர்ந்தருளுமவனே!
ஊன், Oon - மாமிசத்தை
இடை சுவர் வைத்து, Idai Suvar Vaiththu - நடுநடுவே சுவராக வைத்து
என்பு, Enbu - எலும்புகளை
தூண் நாட்டி, Thoon Naatti - கம்பங்களாக நட்டு
உரோமம் வேய்ந்து, Uromam Veyndhu - மயிர்களை மேலே மூடி
ஒன்பது வாசல் தான் உடை, Onbathu Vaasal Thaan Udai - நவத்வாரங்களையுடையதாகச் செய்யப்பட்ட
குரம்பை, nan - குடிசை போன்ற இந்த சரீரத்தை
பிரியும் போது, nan - விட்டுப்பிரியுங்காலத்தில்
உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன், nan - உன்னுடைய திருவடிகளே ரக்ஷகமாக வேணுமென்று நினைத்திருந்தேன்;
நானுடை தவத்தால் திருஅடி அடைந்தேன், nan - (இப்போது) என்னுடைய பாக்கியத்தினால் திருவடிவாரத்தில் சேரப்பெற்றேன்.