Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1004 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1004பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (மனமொழி மெய்கள் மூன்றாலும் பாவங் களையே செய்து செத்தவர்கள் போகிற வழியின் கொடுமையைக் கேள்விப்பட்ட மாத்திரத்திலே நடுநடுங்கி வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் என்கிறார்.) 7
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-7
விளங்கனி முனிந்தாய், Vilangani Munindhai - விளாம்பழமாய் வந்து தோன்றின அஸுரனைச் சீறித் தொலைத்தவனே!
வஞ்சனேன் அடியேன்நெஞ்சினில் பிரியா வானவா, Vanjanen Adiyennenjinil Priya Vaanavaa - வஞ்சகனான என்னுடைய நெஞ்சினுள்ளும் புகுந்து பிரியாதிருக்கிற தேவனே!
தானவர்க்கு என்றும் நஞ்சனே, Thaanavarkku Endrum Nanjane - அசுரர்களுக்கு எப்போதும் மிருத்யுவாயிருப்பவனே!
நீதி அல்லாதன, Neethi Alladhana - அநீதியான ஒழுக்கங்களை
நெஞ்சினால் நினைந்தும், Nenjinaal Ninaindhum - (முதலில்) நெஞ்சாலே நினைத்தும்
வாயினால் மொழிந்தும், Vaayinal Mozhindhum - (பிறகு) வாயாலே சொல்லியும்
செய்தும், Seithum - (பிறகு) செய்கையினால் அனுட்டித்தும்
துஞ்சினார், Thunjinar - முடிந்தவர்கள்
செல்லும், Sellum - அடையத்தக்க
தொல் நெறி, Thol Nerii - நரகமார்க்கத்தை
கேட்டே, Kette - (கற்றுணர்ந்த பெரியோர் சொல்லக்) கேட்டமாத்திரத்திலே
துளங்கினேன், Thulankinen - நடுங்கினவனாய்க்கொண்டு உன் திருவடி அடைந்தேன்-.