Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1003 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1003பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (ஜீவஹிம்ஸைகள் பண்ணித் திரிந்ததற்கும் எல்லையில்லையென்கிறார். கோடியமனமாவது வழியைவிட்டு விலகின மனம்; ருஜு வான வழியில் போகாமல் கோணலாகச் செல்லுகின்ற மனம் என்றபடி. புத்தி கெட்டுச் சினத்தொழில்களைச் செய்தேனென்கிறார்.) 6
கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-6
பரமனே, Paramaney - புருஷோத்தமனே!
பாற்கடல் கிடந்தாய், Paarkadal Kidandhai - திருப்பாற்கடலில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
கோடிய மனத்தால், Kodiyamanathal - கோணலான நெஞ்சோடே
சினம் தொழில் புரிந்து, Sinam Thozhil Purinthu - பிறர்க்கு விரோதமான காரியங்களைச் செய்து
நாய் இனத்தொடும் திரிந்து திளைத்திட்டு, Nai Inathodum Thirinthu Thilaithittu - நாய் முதலிய துஷ்ட ஜந்துக்களோடு கூடித்திரிந்து வேட்டையாடிக்களித்து
ஓடியும் உழன்றும், Oadiyum Uzhanthum - இங்குமங்கும் ஓடித்திரிந்தும்
உயிர்களே கொன்றேன், Uyirgale Konren - பிராணி ஹிம்ஸையையே செய்துகொண்டிருந்தவனாய்
உணர்வு இலேன் நான், Unarvu Ilen Naan - விவேக சூந்யனாயிருந்த நான்
நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன், Namanar Paadiyai Peridum Parisu Azhithitten - யமபட்டணமான நரகத்தின் நிலைமையை மிகவும் அழித்து விட்டேன்.