Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1002 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1002பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (இடும்பையாலடர்ப்புண்டு.- விஷய போகங்களைச்செய்து திரிபவர் களும் ஏழைகளைக் கண்டால் ஐயோ ! என்று இரங்குவதுண்டு ; அந்த இரக்கமும் எனக்கு இல்லாமல் போயிற்றே ! என்று அநுதாபப்படுகிறார்.) 5
இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-5
இடும்பையால் அடர்ப்புண்டு, Idumpaigal Adarppundhu - ஏழ்மைத்தனத்தினால் கஷ்டப்பட்டு
ஓ! துற்று இடுமின் என்று, O Thuttru Idumin Enru - “ஐயோ! ஒரு கவளம் இடுங்கோள்” என்று கதறி
இரந்தவர்க்கு, Irandavarkku - பிச்சை கேட்டவர்களுக்கு
இல்லையே என்று, Illaiye Enru - இல்லவேயில்லை யென்று சொல்லி
நெடு சொலால் மறுத்த, Nedu Solaal Marutha - நீண்ட சொல்லாலே திரஸ்கரித்த
நீசனேன் நான், Neesanen Naan - நீசனாகிய நான்
அந்தோ, Andho - ஐயோ!
வினை பயன்தன்னை நினைக்கிலேன், Vinai Payanthanai Ninaikkilena - பாபங்களுக்கு நேரக்கூடிய பலன்களை நெஞ்சாலும் நினைக்க மாட்டாதவனாயிருக்கின்றேன்;
கடு சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி, Kadu Solaar Kadiyaar Kaalanaar Thamaral Paduvathu Oru Kodu Mirraikku Anji Nadungi - க்ரூரமான சொற்களையுடையராய் க்ரூரமான செய்கை களையுமுடையரான யமபடர்களாலே உண்டாகக் கூடியகடினமாக ஹிம்ஸைகளை நினைத்து அஞ்சி நடுங்கி