Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1001 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1001பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (அக்நி ஸாக்ஷிகமாகத் தாம் விவாஹம் செய்து கொண்ட பெண்டிர்களை அலக்ஷியஞ் செய்து விட்டிட்டுப் பிறருடைய மனைவியையும் பொருளையும் கைப்பற்றி இவ்வுலகில் மனம் போனபடி திரிந்தவர்கள் அந்தப் பாவங்களின் பலனை அனுபவிப்பதற்கு யம லோகஞ் சென்றவாறே அங்கு யமபடர்கள் வந்து பிடித்துக்கொண்டு சக்தி யுள்ளவளவும் புடைத்துத் தங்களுக்கும் இளைப்பு உண்டானவாறே ‘ இங்கே கிடவுங்கள்’ என்று ஒரு மூலையில் தள்ளிவைத்து, செம்பினால் செய்யப்பட்டு நெருப்பிலே பழுக்கப் பழுக்கக் காய்ச்சப்பட்டு எரி வீசுகின்ற பதுமையைக் கொணர்ந்து முன்னே நிறுத்தி, பாவீ! முன்னே பிறர் மனைவியை அணைந்தாயே; இப்போது இந்தப் பதுமையை அணைந்து கொள்” என்று சொல்லி அணைவித்துத் துன்பப்படுத்து வர்கள் – என்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டது முதல் அஞ்சி நடுங்குகின்றேன் ; உன்னைச் சரணமடைந்தால் எல்லா அச்சமும் நீங்கிவிடும் என்று இப்போது உன்னைச் சரணமடைந்திட்டேன் என்றாராயிற்று.) 4
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-4
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து, Vambu Ulaam Koondhal Manaiviyai Thurandhu - பரிமளம் வீசாநின்ற கூந்தலையுடையளான தாலி கட்டின பெண் சாதியை உபேக்ஷித்துவிட்டு
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினார், Piraar Porul Thaaram Endru Ivatrai Nambinaar - பிறருடைய பொருள், பிறருடைய மனைவி என்னும்படிய பரத்ரவ்யங்களை விரும்பினவர்கள்
இறந்தால், Irandhaal - இறந்துபோனால்
நமன் தமர், Naman Thamar - யமபடர்கள்
பற்றி, Patri - பிடித்துக்கொண்டு
எற்றி, Etri - துன்பப்படுத்தி
வைத்து, Vaiththu - (தங்களுக்கும் கை சலித்தவாறே) ஓரிடத்தில் போட்டுவைத்து,
பாவீ, Paavee - “பெரும்பாவங்களைச் செய்து இவ்விடம் வந்து சேர்ந்தவனே!
செம்பினால் இயன்ற எரி எழுகின்ற பாவையை தழுவு என, Sembinaal Iyanra Eri Ezhugindra Paavaiye Thazhuvu Ena - செம்பினால் செய்யப்பட்டதாய் நெருப்புப் பற்றியெரிகின்றதான இந்த ஸ்த்ரீப்ரதிமையைத்தழுவிக்கொள்” என்று
மொழிவதற்கு அஞ்சி, Mozhivadharku Anji - சொல்லப்போகிறார்களே! யென்று பயப்பட்டு
நம்பனே, Nambane - ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனே!