Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1000 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1000பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (போக்கினேன் பொழுதினை வாளா ” என்று வீண்போது போக்கினதாகக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்தார் ;) 3
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3
வேலை வெண்திரை அலமர, Velaivendhirai Alamara - கடலிலேயுள்ள வெளுத்த அலைகள் கலங்கும்படி
கடைந்த, Kadaindha - (தேவர்களுக்காகக்) கடைந்தருளின
சூதினை பெருக்கி, Soodhinai Perukki - அதிகமாகச் சூதாடியும்
களவினை துணிந்து, Kalavinai Thuninthu - களவு செய்வதில் துணிந்தும்
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலேமிகுத்து, Suri Kuzhal Madanthaiyar Thirathu Kaadhalemiguthu - சுருண்ட கூந்தலையுடைய ஸ்த்ரீகள் விஷயத்திலே மிக்க ஆசைகொண்டு
கண்ட ஆ திரிந்த, Kanda Aa Thirindha - கண்டபடியெல்லாம் தட்டித்தரிந்த
தொண்டனேன், Thondaneyn - அடியேன்
நமன் தமர்செய்யும் வேதனைக்கு, Naman Thamarcheyyum Vedhanaiyikku - யமபடர்கள் செய்யப்போகிற ஹிம்ஸைகளை நினைத்து
ஒடுங்கி நடுங்கினேன், Odungi Nadunginen - உடல் குன்றி நடுங்கினவனாய்
வந்து உன் திருஅடி அடைந்தேன், Vandhu Un Thirudi Adaindhen - இன்று வந்து உன் திருவடிகளைச் சேர்ந்துவிட்டேன்.